வெங்கடசமுத்திரத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணக் கூட்டம்

1 Min Read

வெங்கடசமுத்திரம், ஜூலை 23– அரூர் கழக மாவட்டம் வெங்கட சமுத்திரத்தில் 15.7.2024ஆம் தேதி பகல் 1.30 மணி அளவில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயண குழுவினர் வருகை தந்தனர்.

அங்கு பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன் தோட்டத்தில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுக்குழு உறுப்பினர் வேங்கை தமிழ்ச்செல்வன் தலைமையில் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி மாலை அணிவித்தார்.

அங்கு வைக்கப்பட் டுள்ள பெரியார் பெருந் தொண்டர் வி.ஆர்.வேங் கன் படத்திற்கு கழக காப்பாளர் அ.தமிழ்ச் செல்வன் மாநிலக் கலைத் துறை செயலாளர் மாரி.கருணாநிதி ஆகியோர் இணைந்து மாலை அணி வித்தனர்.
வெங்கடசமுத்திரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சாய்.குமார் தலைமையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை விளக்கி நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமை கழக அமைப்பாளர் ஆகி யோர் நீட் எதிர்ப்பு முழக்க மிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கழக காப்பாளர் ஆர்.தமிழ்ச் செல்வன், இளைஞர் அணி மாணவர் அணி பொறுப்பாளர்கள் சமரசம், பெரியார், திருவள்ளுவன், அம்மாபேட்டை மணி, உமா, வேப்பநத்தம் கல் பனா, அய்யனார், சி.அழகிரி, பெரியவர் ராஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *