திருப்பத்தூர், ஜூலை 23– நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் ஜூலை 13, 14இல் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது நீட் தேர்வு ரத்து ஏன்? என்ற புத்தகம் ஏராளமாக விற்பனை ஆனது. அதை தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.
வினோத் – தி.மு.க. கவுன்சிலர், டி.சி.கார்த்திக் தி.மு.க. மாவட்ட மாணவர் கழக தலைவர், வே.அன்பு – மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் – எஸ்.ஆர்.ராஜேந்திரன் நகர செயலாளர், ஏ.டி.ஜி. இந்திரஜித் – கழக பொறுப்பாளர், குரிசல் மணி – அம் பேத்கர் பெரியார் மார்க்ஸ் பதிப்பகம், ஆ.ப.செல்வராஜ் – விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர், அண்ணா சரவணன் – மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர், பெ.கலைவாணன் – மாவட்ட செயலாளர், வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர் ஆகியோர் தலா ரூ.500 கொடுத்து புத்தகம் பெற்றனர்.