கடவுள் ‘சக்தியோ சக்தி’ கோயில் உண்டியல் திருட்டு

1 Min Read

கருங்கல், ஆக. 18– கருங்கல் அருகே கோவிலில் உண் டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தவர் களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கருங்கல் அருகே உள்ள மிடாலக்காட்டில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு வழிபாடுகளில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 2 உண்டியல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சம்ப வத்தன்று இரவு அர்ச்சகர் வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் அர்ச் சகர் வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்தது. இத னால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 2 உண் டியல்களின் பூட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் பூட்டை உடைத்து உண் டியல் பணத்தை கொள் ளையடித்து விட்டு வளா கத்தில் இருந்த பொருட் களையும் கொள்ளயை டித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கருங்கல் காவல்துறையில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல்துறையி னர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *