மாநகர் திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் முடிவு
மதுரை, ஜூலை 23- மதுரை புதிய கழக அலுவலக அரங்கத்தில் மாநகர் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 14.7.2021 மாலை 7 மணி அளவில் மதுரை கீழமாசி வீதிவடக்குமாசிவீதி சந்திப்பில் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் பழக்கடை அ.முருகானந்தத்திற்கு சொந்தமான கட்டடத்தின் இரண்டாவது மாடியில் பெரிய அளவில் ஒரு அரங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த அரங்கத்தை ஒட்டி இருக்கும் குளிர்சாதன அறையையும் இயக்க நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கி யுள்ளார்.
அப்படிப்பட்ட அந்த அரங் கத்தில் நடைபெற்ற கழகப் பொறுப்பாளர்களின் கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பழக்கடைஅ.முருகானந்தம் தலைமை ஏற்றார். அனைவரையும் வர வேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “இங்கே கலந்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொருவரும் , தலைமைக் கழகம் அறிவிக்கக் கூடிய ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற உண்ர்வோடு விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் ஒவ்வொரு பணியிலும் தன்னுடைய உழைப்பை பங்களிப்பை வழங்கக் கூடிய வர்கள். முகம் சுளிக்காமல் பணியாற்றிக் கூடியவர்கள்.இப்படி உழைக்கக் கூடிய அனைவரும் தமிழர்தலைவர் அவர்களின் பாராட்டைப்பெற்றவர்கள். இயக்கத்தில் உழைப்பவர்களுக்கு, உணர்வோடு பங்களித்து உறுதுணையாக இருப்பவர்கள் தான் தமிழர்தலைவர் அவர்களின் அன்பைப்பெறுவார்கள்.அப்படி வந்தவர்கள்தான் நாங்கள்” எனக் கூறிஅவர்கள் அனைவருக்கும் தன் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அவர் இயக்கப் பணியாற்ற, கலந்து பேச, சந்திக்க இடம் இல்லையே என்ற பல ஆண்டுக் கனவை உண்மைமாக்கி, அலுவலகம் இல்லை என்ற குறையைப் போக்கி மிகச்சிறப்பாக இந்த அரங்கத்தை ஏற்பாடு செய்து தந்துள்ள அ.முருகானந்தத்திற்கு அவர்களுக்குச் சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்ததோடு ஒரு பாடலை நினைவு கூர்ந்தார்.
“பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை.மன மிருக்கும் மனிதரிடம் பண மிருப்பதில்லை.” இதையும் பொய்யாக்கி இந்த அரங்கத்தை இயக்கப்பணிக்குப் பயன்படுத்த நமக்கு வழங்கியிருக்கிறார்.அந்த வரிசையில் இவருக்கு முன்னோடியாக அய்யா கல்வி வள்ளல் பே.தேவசகாயம், காப்பாளர் எடிசன் ராஜா ஆகியோர் ஒத்துழைப்புடன் பெரியார் மாளிகையை பல ஆண்டு காலம் நாம் இலவசமாகப் பயன்படுத்தி வந்தோம்.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்கு நடந்த பல நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்துள்ளார்.
அவர்களுக்குப் பிறகு அவர்களின் வழித் தோன் றல்களான மாவட்ட இளைஞர் அணித் தலைவர் செல்வப் பெரியார், ஈரோட்டுப் பெரியார் ஆகியோர் இன்று வரை இயக்கத்திற்கான பணியை, உதவியைச் செய்து வருகிறார்கள். இவர்களுக்குப் பின் அந்த வரிசையில் தலைவர் அ.முருகானந்தமும் இவ்வரங்கத்தை உருவாக்கியதன் மூலம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இப்பணியைச்செய்து பணம் இருப்பவர்களிடம் இயக்கத் திற்கும் பிறருக்கும் உதவிடும் மனமும் இருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளை இந்த அரங்கத்தில் இனித் தொடர்ச்சியாக அரங்கத்திற்கான செலவின்றி நடத்தலாம் என அவர் குறிப்பிட்டார்.
அரங்கத்தில் மேடை, ஒலி, இருக்கைகள், ஒளிஅமைப்பு.போர்டியம் என நிகழ்ச்சி நடத்தத் தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு அணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மட்டும் சென்னை பெரியார் திடலில் நடைபெறுவது போன்ற தொடர் நிகழ்வுகளை இங்கு நடத்த வேண்டும் என வே.செல்வம் கேட்டுக் கொண்டார்.
மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் பேசும்போது “நான் நம் இயக்கத்திற்கு வருவதற்கும் மற்றும் என் வாழ்வின் உயர்வுக்கும் காரணமான எனது இளையசகோதரனும் முன்னாள் புறநகர் மாவட்டசெயலாளருமான அ.வேல்முருகனுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.பல்வேறு நேரங்களில் பல சூழ்நிலைகளில் தகுந்தமுடிவுகள் எடுக்கக் காரணமானவன் வேல்முருகன் எனக்கூறினார்.இவ்வரங்கம் உருவாகவும் பல அறிவுரைகளை வழங்கியவர் வேல்முருகன் “என்றார்.என் பழைய பழக்கடை மாறுதலாகிப் போனதற்குப் பின் கடந்த 5 ஆண்டுகளாகத் தோழர்கள் சந்திக்க, கூட்டம் நடத்த மிகவும் கஷ்டப்பட்ட நிலையில்தான், நம் பரப்புரைகள் குறிப்பாக பயிற்சிப்பட்டறைகள்தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
அதன்மூலமாக நம் ஆதரவா ளர்களைப் பெருக்கவேண்டும். இயக்கத்தை வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை உருவாக்கியுள்ளேன் எனக்கூறினார்
தொடர்ந்து திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு, இளைஞர் அணி மாவட்ட தலைவர் தே.எ.செல்வப் பெரியார், இளைஞர் அணி செயலாளர் பெ.காசி, மாவட்ட துணைத்தலைவர்கள் நா.முருகேசன், அனுப்பானடி பவுன்ராசா, மாவட்ட துணை செயலாளர்கள் தனுஷ்கோடி, க.சிவா, இளைஞர் அணி அமைப்பாளர் வேல்துரை, போட்டோ ராதா, , ’மந்திரமா? தந்திரமா’ நிகழ்ச்சியாளர் பேரா.சுப.பெரியார் பித்தன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பேரா.சி.மகேந்திரன், உளவியல் நிபுணர் வெண்ணிலா மகேந்திரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி, மாவட்டத்தலைவர் அ.முருகானந்தத்திற்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
நிறைவாக உளவியல் நிபுணர் வெண்ணிலா மகேந்திரனை வாரந்தோறும் அழைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் நமது இயக்கக் குடும்பத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு வழி காட்டும் நிகழ்வுகளை நடத்துவது என்றும், மதுரையில் அமைந்திருக்கும் அரங்கத்தை கழக நிகழ்ச்சிகளுக்கும் மாதாந்திர கூட்டத்திற்கும், பயிற்சிப் பட்டறைகள் நடத்தப் பயன் படுத்துவது என்றும் வாரம் தோறும் தொடர் நிகழ்வுகளை மதுரையில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக அமைப்பு களின் சார்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அது போல குளிரூட்டப்பட்ட அறை, அரங்கம் உள்ளிட்ட வைகளுக்கு பெரியார் மய்யம், மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம் என்றும், சுமார் 150பேர் அமரும் அரங்கத்திற்கு பெரியார் வீரமணி அரங்கம் என்றும் பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டது.