திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை – இர. இராஜசேகர் ஆகியோரின் மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

1 Min Read

சென்னை வியாசர்பாடி அ. பாலன் – பா. நிர்மலா ஆகியோரின் மகளும், திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளருமான வழக்குரைஞர் பா. மணியம்மை – செந்துறை குழுமூர் கிராமம் வே. ரவீந்திரன், – ர. செல்வம்பாள் ஆகியோரின் மகன் இர. இராஜசேகர் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்தார். உடன்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, எழுத்தாளர் ஓவியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், மோகனா அம்மையார், சி. வெற்றிச்செல்வி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் (சென்னை, 21.7.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *