சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் ப.கோவிந்தராஜன் மார்பு அளவு உருவச் சிலையை அவரது குடும்பத்தினர் இணையர் கனிமொழி, மகள் மருத்துவர் தென்றல், மகன் டாக்டர் அறிவன், அன்பன் மற்றும் டாக்டர் சித்ரா, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் அமைத்து இருந்தனர். கோவிந்தராஜன் சிலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டினை எடுத்துக்கூறி நினைவுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அவரது குடும்பத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, தமிழினியன், தியாகராஜன், கார்த்திகேயன், வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். (சென்னை, நங்கநல்லூர் – 22.7.2024)
சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் ப. கோவிந்தராஜன் சிலையை அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books