பெரியார் பாலிடெக்னிக்கில் பகடிவதை தடுப்புக் குழுவின் (Anti Ragging Committee) ஆண்டுக் கூட்டம்

Viduthalai
2 Min Read

வல்லம், ஜூலை 22- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பகடிவதை தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பகடிவதை (ragging) என்ற சமூக குற்றத்தை தடுப்பதோடு மாணவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல உறுதுணையாக உள்ளது.
இப்பாலிடெக்னிக்கில் ஒவ்வொரு ஆண்டும் பகடிவதை தடுப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் காவல்துறை அதி காரிகள். வல்லம் பேரூராட்சித் தலை வர். மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
18.07.2024 அன்று பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025ஆம் கல்வியாண்டின் பகடிவதை தடுப்பு குழு கூட்டம் (Anti Ragging Committee Meeting) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா தலை மையேற்று உரையாற்றினார். மாணவர்களுக்குள் ராகிங்(Ragging) பிரச்சினைகள் ஏற்படாதவாறு எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறிய அவர் இக்கல்லூரி பகடிவதை (Ragging) இல்லாத Ragging Free Zone ஆக திகழ்கின்றது என்று குறிப்பிட்டார்.
வல்லம் பேரூராட்சியின் உரை
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வல்லம், பேரூராட்சி தலைவர் கே.செல்வராணி கல்யாணசுந்தரம், இக்கல்லூரிக்கு கல்வி பயில வரும் மாணவ, மாணவிகள் நன்கு செதுக்கப்பட்ட சிலைகளாக வெளியே செல்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

காவல் ஆய்வாளரின் கம்பீரமான உரை
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த வல்லம் காவல் ஆய்வாளர் ஏ.ராஜேஷ் மாணவர்களிடையே உரையாற்றும் போது, மாணவர்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தாமல் நல்ல முறையில் படித்து வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். விழாவில் வல்லம், காவல் உதவி ஆய்வாளர் எஸ்.மணிவண்ணன் மற்றும் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் டி.கலாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெற்றோர்களின் கருத்துக்கள்
விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மூன்றாமாண்டு கணினியியல் துறை மாணவர் குருசச்சிந்தர் மற்றும் மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் மாணவி தனிஷா, ராகிங்(ragging) என்ற பிரச்சினை எங்கள் கல்லூரியில் இல்லை என்று குறிப்பிட்டார்கள்.
மாணவரின் கருத்துக்கள்
மாணவர் ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *