காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

2 Min Read

அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்களுக்கு
அழைப்பிதழ் வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

தஞ்சை, ஜூலை 22– காவிரி நீர் உரிமைக் கோரி ஜூலை-23 மாலை தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப் பினருமான துரை.சந்திரசேகரன், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம்,தஞ்சாவூர் மாநகர செயலாளர், மேயர் சண்.ராமநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி இராஜேந்திரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயலாளர் வி. தமிழ்ச்செல்வன் ,தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணம், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயனுல்ஆபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் அய்.எம்.பாதுஷா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தியாகராஜன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் பாபு, சமவெளி விவசாயிகள் சங்க உறுப்பினர் சு.பழநிராஜன், தாளாண்மை விவசாய சங்க செயலாளர் திருநாவுக்கரசு, தஞ்சை மாவட்ட விவசாயிகள் நல சங்க மாவட்ட செயலாளர் சின்னத்துரை ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம் தங்கள் கட்சி தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என உறுதி அளித்தனர்.

கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், காப்பாளர் மு. அய்யனார், மாநகர கழக தலைவர் பா.நரேந்திரன், மாநகர கழக இணைச்செயலாளர் இரா.வீரகுமார், மாநகர துணை தலைவர் அ.டேவிட் ஆகியோர் பொறுப்பாளர்கள் அனைவரையும் சந்தித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *