ஒசூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வனவேந்தன். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி இணையரின் மகள் க.கா.வெற்றி-தருமபுரி து.இரவிக்குமார்-
க.கண்ணகி இணையரின் மகன் இர.இரகுவர்மா ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை கழக தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் ஆகியோரிடம் வழங்கினர்.
பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் 1995 முதல் 1999 ஆம் ஆண்டு வரை பொறியியல் படித்த மாணவர்கள், 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக அதே கல்லூரியில் பயின்ற மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். உடன் விஜயா கவுரி, சிறீதேவி, ஜெயலட்சுமி, சூரியப்பிரியா ஆகியோர். (பெரியார் திடல், 18.07.2024)