கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.7.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மிரட்டல்கள் மூலம் உருவாக்கப்பட்ட மோடியின் ஆட்சி விரைவில் கவிழும்: மம்தா, அகிலேஷ் கணிப்பு.
* பணி ஓய்வு பெறும் நீதிபதிகள் அரசியலில் நுழைய தடை, தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அமெரிக்க அதிபர் தேர்தல்.. இறங்கி வந்த ஜோ பைடன்.. போட்டியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு; துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்புத் தகுதி, கன்வார் யாத்திரை வணிகர்கள் பெயர் பலகை உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு.
* கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை உணவகங்களின் பெயர் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற உ.பி.அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்தரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கைது செய்ய வேண்டும் என்று அபிஷேக் கோரிக்கை;

தி இந்து:

* அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி. 58 ஆண்டுகால தடையை நீக்கிய மோடி அரசு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம்.

தி டெலிகிராப்:

* பாடத்திட்டத்தில் அம்பேத்கர் கூறிய சில கருத்துகள் நீக்கம்; மத்திய ரேகா, சிந்து-சரஸ்வதி நாகரிகம் பற்றிய குறிப்புகள் சேர்த்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.
* ‘மெக்டொனால்ட்ஸ் மற்றும் பர்கர் கிங் விற்பனை நிலையங்களில் அவர்கள் என்ன பெயரை எழுத வேண்டும்? கடைக்குப் பதிலாக சட்டைகளில் பெயரை எழுதச் சொல்வீர்களா? உ.பி. அரசின் ஆணையை கண்டித்து பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர் ஆர்.எல்.டி. கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி காட்டம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *