எச்சரிக்கை: இரு சக்கர வாகனம் ஓட்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை

1 Min Read

சென்னை, ஆக. 18- சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல்துறை சார்பில், 16.8.2023 அன்று புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது, பள்ளிக்கு வரும்போதும், பள்ளி முடிந்து போகும்போதும் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, பேருந்து ஓட்டுநர்  மற்றும் நடத்துநருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், நாம் படிக்கும் பள்ளிக்கும், பள்ளி ஆசிரியர் களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், பெற்ற தாய். தந்தையருக்கும் நற்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும், ஒழுக்கத்துடன் கல்வி பயில வேண்டும், பள்ளி மாணவர்கள் ஆகிய தாங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் வாகனத்தை கொடுத்த பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீண்டும் படிக்கட்டில் பயணம் செய்தால் உங்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *