மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 21 மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறை யில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கக் கூடாது.
மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கை களுக்கு மேல் உள்ள ஸ்டிக் கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.
ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
எந்தவித புகார்களுக்கும் இடமளிக் காமல், தக்க மேல்நடவடிக்கை எடுக்கும் படி அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *