கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

 18.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉 மகாராட்டிராவில் பட்னாவிசுக்கு ஏற்பட்ட   நிலைதான் பிரதமர் மோடிக்கும் ஏற்படும் என சரத்பவார் விமர்சனம்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 மணிப்பூர் குக்கிஸ் இனமலைவாழ் மக்களின் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தனி தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர் கோரி பிரதமருக்கு கடிதம்.

👉தமிழ்நாடு மீனவர்கள் சங்க மாநாட்டில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

👉 அனைத்து மாநிலத்திற்கும் குரல் கொடுக்கும் மாநில கட்சியாக திமுக உள்ளது. என முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தொண்டர் களிடையே ராமநாதபுரத்தில் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் நாடாளுமன்றத்தில் குரல்களை ஒடுக்க வழிவகுக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 நூஹ் மாவட்ட ஊர்வலத்தின் போது சங் பரிவார் கூட்டம் வாள்கள், திரிசூலங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தி இந்து:

👉2024 பொதுத் தேர்தலில் உ.பி.யில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். என அகிலேஷ் யாதவ் உறுதி.

👉பல்லுயிர் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்த இரண்டு புதிய மசோதாக்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலம் மோடி அரசை மன்னிக்காது என சி.பி.அய். எம்.பி. பினாய் விஸ்வம் காட்டம்.

தி டெலிகிராப்:

👉நாட்டில் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பிரதமர் மோடி ஒன்றும் பேசாமல் மவுனமாக இருப்பார் என டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டு. 

👉 பில்கிஸ் பானு வழக்கில் குறிப்பிட்ட சில கைதிகளை விடுவிப்பதற்கான விதிகளை குஜராத் அரசு பயன்படுத்தியது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி. 

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 209 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக செலவு அறிக்கை.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *