சென்னை, ஜூலை20- கடலுார் மாவட்டம், மருங்கூரில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத் தப்படுகிறது.
இங்கு ஏற்கனவே ராஜராஜன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி ஆகியவை கிடைத்தன. இந்நிலையில் நேற்று 122 செ.மீ., ஆழத்தில், இரண்டு ரவுலட்டட் வகைப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் அரிக்க மேடு, வசவசமுத்திரம், பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கீழடி ஆகிய இடங்களிலும் ஆந்திரா, ஒரிசா மாநிலக் கடற்கரை ஓரங்களில் உள்ள தொல்லி யல் தளங்களிலும் இதே வகையான பானை ஓடுகள் கிடைக்கின்றன. பொதுவாக இந்த ரவுலட் டட் வகை பானை ஓடு, ரோம நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்தன.
சமீப காலத்தில் தான், தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்ட மட்கலன் கள் என நிரூபிக் கப்பட்டு உள்ளது. இவை சங்க காலம் எனும் துவக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவை. இதிலிருந்து மருங்கூர் பகுதி துவக்கவர லாற்றுக்காலத்தைச் சார்ந்த தொல்லியல் தளம் என்பது உறுதி செய்யப்படுகிறது.