கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

20.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மீண்டும் பாஜக ஹிந்துத்வாவை முன்னிறுத்தும் வகையில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உணவக உரிமையாளர்கள் தங்கள் பெயரை வைக்க கட்டாயப்படுத்துவதற்கு பாஜக கூட்டணிக் கட்சிகள் இடையே பிளவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*கன்வர் யாத்திரையில் புதிய சர்ச்சை – உணவு கடைகளில் உரிமையாளர் பெயர், முகவரி கட்டாயம்: உபி, உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவால் பரபரப்பு.
* உ.பி. அரசின் முடிவுக்கு, ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு. மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு ஜாதிக் கணக் கெடுப்பில் பாஜக எதிர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா? சர்ச்சை தொடர்கிறது.
* மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு: இந்தியாவில் 200 விமானங்கள் ரத்து, லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு
தி இந்து:
* 8 கோடி புதிய வேலை வாய்ப்புகள் குறித்து பிரதமர் ‘பொய்’ சொல்லி இளைஞர்களின் உணர்வை காயப் படுத்துகிறார் என்று காங்கிரஸ் கண்டனம்.
* சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பான சர்ச்சைகள் உள்ள நிலையில், யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி பதவிக் காலம் முடிவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகல்.
தி டெலிகிராப்:
* ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வர்ண, ஜாதி அமைப்பு குறித்த பாடங்களை நீக்கியது, என்.சி.இ.ஆர்.டி.
* 12 பொதுத்துறை வங்கிகளில் அரசு பங்குகளை மோடி அரசு குறைத்தால், காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும், ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை.
* கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் உரிமையாளர்களின் பெயர்களை காட்ட வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவு, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *