பன்னீர்ச்செல்வி மறைவு – கழகத் தோழர்கள் மரியாதை

Viduthalai
1 Min Read

திருச்சி, ஜூலை 20- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் காளாப்பூர் பெரியார் என அழைக்கப்பட்ட பழனியாண்டி அவர்க ளின் பெயர்த்தியும், தன் பெண் மக்கள் அய்ந்து பேருக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த INA சின்னையா அவர்களின் மகளும் சீரிய பகுத்தறிவாளர் விடுதலை நாளிதழின் நீண்ட கால வாசகரும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான அழ. இலட்சுமணன் அவர் களின் துணைவியார் ஜாதி ஒழிப்பு வீராங்கனை இறுதி வரை பெரியார் கொள்கையே என் வாழ்க்கை முறை என வாழ்ந்துவந்தவருமான மானமிகு சி.பன்னீர்ச் செல்வி (வயது 74)அவர்கள் நேற்று 19.7.2024 வெள்ளி அன்று இயற்கை எய்தினார்.
அவருக்கு அன்புச்செழியன், இளஞ்செழியன், மணி மேகலை ஆகிய மக்கள் உள்ளனர். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று (20.7.2024) சனிக்கிழமை சிங்கம்புணரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது
சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இர.புக ழேந்தி, மாவட்ட செயலாளர் காளாப்பூர் பெ.ராசாராம், மாவட்ட துணைத்தலைவர் செ.தனபாலன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *