காவிரி நீர் வழக்கு : அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

2 Min Read

புதுடில்லி,ஆக.18– காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு தரவேண் டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. அந்த மனுவில், கடந்த ஆக.11 அன்று காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆணையம் தன் னிச்சையாக அடுத்த 15 நாட் களுக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால்போதும் என உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமானது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விட்டிருப்பது அப் பட்டமான விதிமீறல்.

மேலும், தமிழ்நாட்டிற்கு கருநாடகம் நடப்பாண்டில் கடந்த ஜூன் 1 முதல் இம் மாதம் ஆக.11 வரை 53.27 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் வெறும் 15.79 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இது வரை கிடைத்துள்ளது. பற்றாக்குறையான 37.48 டிஎம்சி தண்ணீரை உடனடி யாக திறக்க உத்தரவிட வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என 2 குழுக்களும் சேர்ந்து தான் கருநாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு  சேர வேண்டிய தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 2 குழுக்களும் இந்த விசயத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை.

வறட்சிக் காலங்களில் தண்ணீரை எவ்வாறு தமிழ் நாட்டும் கருநாடகமும் பங் கீட்டுக்கொள்ள வேண்டு மென்ற கொள்கையையும் வகுக்கவில்லை. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் கருநாடக மாநிலம் வெளிகொண்டலு நீர் தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும், செப்டம்பர் மாதத் தில் திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோக்தகி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டார். ஆனால், இந்த முறையீட்டை பதிவுத் துறையில் முன்கூட்டியே பதிவு செய்து அதன்பின்னர் முறையிட நீதிபதிகள் அறிவு றுத்தினர். எனவே, இதே அமர்வு முன்பு வரும் 21.8.2023 அன்று தமிழ்நாடு அரசு மீண்டும் முறையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *