தமிழ்நாடு அரசின் 14 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

1 Min Read

சென்னை, ஜூலை 20- தமிழநாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்ட மாகி விடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோ தாக்களில் ஒருசில மசோதாக்களில் கையெழுத்திடாமல் விளக்கம் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பிய நிகழ்வும் அரங்கேறியது.

இதனால் ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது.
இந்த சூழலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஆளுநர் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி இப்போது ஒப்புதல் வழங்கி உள்ளார்.
புதுக்கோட்டை, திருவண்ணா மலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநக ராட்சியாக தரம் உயர்த்திய மசோதா, ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும்போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா.

சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்றுவதற்கு இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் திருத்த மசோதா, சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா, உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *