அதிர்ச்சித் தகவல்: நாட்டில் 50% மக்கள் மட்டுமே மூன்று வேளை உணவு உண்கின்றனர்

2 Min Read

அகமதாபாத், ஜூலை 20 மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான அளவில் சீர்குலைந்து விட்டது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறியுள்ளதே மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனை ஆகும். ஆனால், மோடி அரசோ 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டு விட்டதாக அடிக்கடி பொய்யான தகவலை கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.
இந்நிலையில், நாட்டில் 50% மக்க ளுக்கு மட்டுமே 3 வேளையும் உணவு கிடைப்பதாக 21 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

21 மாநிலங்களில் வறுமைக்கோடு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. “ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெரும்பணக்காரர்கள் என அனைத் துத் தரப்பு மக்களிடமும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாட்டில் 44% மக்களுக்கு 3 வேளையும் உணவு கிடைக்கவில்லை. மாநில அளவில் கணக்கிடும்போது இந்த எண்ணிக்கை சற்று வித்தியாசமாக உள்ளது. நாடு முழுவதும் 21 மிக முக்கியமான மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் நாட்டிலேயே தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட் டுமே ஏழைகள், நடுத்தர குடும்பம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பிலும் 98% பேருக்கு 3 வேளை யும் உணவு கிடைக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்கள் படுமோசம்
மேலும் இந்த ஆய்வறிக்கையின் தகவலின் படி‘‘மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. இதேபோன்று பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடைசி 5 இடங்களில் உள்ளன.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங் களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 97%, கேரளாவில் 98% பேருக்கு 3 வேளையும் உணவு கிைடக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் 41%, மத்தியப் பிரதேசத்தில் 39%, மகா ராட்டிரா 34%, ராஜஸ்தானில் 34%, குஜராத்தில் 33% ஏழைகளுக்கு மட் டுமே 3 வேளை உணவு கிடைக்கிறது” என தகவல் வெளி யாகியுள்ளது.
பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடி யாக இருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உணவு பாதுகாப்புத் துறையிலும் முன்னணியில் இருப்பது ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ள நிலை யில், அதே நேரம், மோடியின் குஜ ராத்தில் 69% பேர் போதியளவு உணவில்லாமல் தவித்து வருவது அம்பலமாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *