கவுந்தப்பாடி, ஜூலை 19 ஈரோடு கழக மாவட்டம் கவுந்தப்பாடியில் தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, பரப்புரை கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், மாநகரச் செயலாளர் தே.காமராஜ், கோபி மாவட்ட செயலாளர் சென்னியப்பன், பேராசிரியர் ப. காளிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் தேவராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் நல்லசிவம், பவானி ஒன்றிய செயலாளர் அசோக்குமார், செ.பிரகாசன், சசிகுமார், கவுந்தி பாலன், ம.தி.மு.க. மதியழகன், தி.மு.க. பேரூர் கழக செயலாளர் பழனிச்சாமி, குணசேகரன் தொமுக, 4 ஆவது வார்டு செயலாளர் தனசேகர், 3 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், சிவசம்பு நாதன், ஜோசப், பசுபதி, சிறீதர், சீனிவாசன், பாலு, வேலு, கோபாலன், ஏசான் மலை உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர். கழக பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். பரப்புரைப் பயணச் செலவிற்கு மாவட்டத் துணைச் செயலாளர் பட்டுச்சாமி ரூ.500/- அளித்தார்.
ஈரோடு மாவட்டம் -கவுந்தப்பாடியில் பரப்புரை

Leave a Comment