‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

1 Min Read

நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் ப. கோவிந்தராசன் அவர்களின் நான்காம் ஆண்டு நிைனவாக (22.7.2024) ‘பெரியார் உலக’த்திற்கு அவரது மகள் கோ. தென்றல் தமிழர் தலைவரிடம் ரூ.10,000 நன்கொடை வழங்கினார். (சென்னை – 18.7.2024).

நன்கொடை

திரைப்பட இயக்குநர் ஏ. பீம்சிங் 100ஆவது பிறந்த நாளில் (15.7.2024) அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தினர் சார்பாக அவரது மகன் பீ. இருதயநாத் ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.

நன்கொடை

பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக 10,000 (34/40) ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.8,40,000 வழங்கியுள்ளார். (சென்னை, 18.07.2024).

நன்கொடை

சிவகாசி மணி உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இணையர், மகளிடம் உடல் நலம் பற்றி தமிழர் தலைவர் விசாரித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *