பக்தி கற்பிக்கும் ஒழுக்கம்? திருப்பதி கோவிலில் 20 முறை மோசடி தரிசனம் செய்த பக்தர் கைது

viduthalai
1 Min Read

திருமலை, ஜூலை 19 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவைச் சேர்ந்த சிறீதர் என்ற பக்தர் நேற்று (18.7.2024) அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கொண்டு வந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை நுழைவுச் சீட்அடை திகாரிகள் வாங்கி சோதனை செய்தனர். ஆதார் அட்டையில் உள்ள முகமும், சிறீதரின் முகமும் ஒத்துப்போகவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் சிறீதரை பிடித்து விசாரித்தனர்.

அவர், போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி குலுக்கல் முறை சேவையான சுப்ரபாத சேவை நுழைவு சீட்டைப் பெற 400 முன்பதிவுகள் செய்திருப்பதும், அதில் 20 முறை நுழைவுச் சீட்டுகளை வாங்கி சாமி தரிசனம் செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், சிறீதரை திருமலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறீதரை கைது செய்தனர். சுப்ரபாத சேவை நுழைவுச் சீட்டுகளில் வேறு யாரேனும் அவருடன் இணைந்து மோசடி செய்திருக்கிறார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *