தந்தை பெரியார் பொன்மொழிகள்

1 Min Read

👉 மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான். இதைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காவது மொழி வேண்டுமென்றால் அந்தக் காரணத்துக்குப் பயன்படும்படியான மொழிதான் நமக்கு வேண்டும்.

👉  உலக நிலைக்கு உதவும் மக்கள் என்ன நிலையில் இருக்கின்றோம் என்றால் இழிமக்களாக – சூத்திரர்களாகப் பஞ்சமர்களாக நம் தாய்மார்கள் எல்லாம் சூத்திரச்சிகளாக, அடிமைகளாக வாழ்கின்றோம். நமக்குப் படிப்பு கிடையாது; பதவி கிடையாது; கோயிலில் சென்று உள்ளே வணங்க வகை கிடையாது. இந்த நிலையில்தான் பாட்டாளி மக்களாகிய நாம் – இந்த நாட்டின் பரம்பரை மக்களாகிய நாம் இருக்கின்றோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *