தமிழர் தலைவரிடம் நன்கொடை

0 Min Read

கருநாடக மாநில திராவிடர் கழகக் காப்பாளர் வரதராஜன் அவர் தம் மகன், வருண்ராஜ் மணிமாறன் லண்டன் சென்று எம்.எஸ். பட்டம் பெற்றதன் மகிழ்வாக இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதியாக 25,000/- ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். வரதராஜன் இணையர் வெண்மலர் அண்மையில் மறைவுற்றிருந்தார். அதற்கு ஆசிரியர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். (பெரியார் திடல், 17.07.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *