‘நாயும் / ஓநாயும்’

1 Min Read

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓநாய் மற்றும் நாய் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான விலங்குகள் காணப் படுகின்ற னவாம். குறிப்பாக மகாராட்டிர மாநிலம் புனே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் இந்த விசித்திர விலங்குகள் நடமாடுகின்றன.

பார்ப்பதற்கு ஓநாயை போலவே இருந்தாலும் ஆராய்ச்சியில் இது ஒரு கலப்பின விலங்காக உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே பெரும் ஆபத்து நேரலாம் என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள். மகாராட்டிராவில் உள்ள சில வனப் பகுதிகளில் ஓநாய்களில் சற்று வித்தியாச மான விலங்கு தென்பட்டது. இது வழக்கமான ஓநாயை போலவும் இல்லை.

நாய்களை போலவும் இல்லை என வியந்த வன உயிரியல் ஆர்வலர்கள், வினோதமான இந்த விலங்கின் முடி மற்றும் மலத்தை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அதில், இந்த வினோத விலங்கு நாய் மற்றும் ஓநாய் ஆகியவற்றின் கலப்பினத்திலிருந்து உருவான ஒரு கலப்பின விலங்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..

இந்த விலங்கு ஓநாய்-நாய்கள் என்று அழைக் கப்படுகின்றன. நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பு பற்றி பன்னாட்டு அளவில் ஆய்வுகள் நடக்கிறது. இருந்தாலும் இந்தி யாவில் இத்தகைய ஆதாரங்கள் முதல் முறையாக இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த ஓநாய்-நாய் கலப்பின விலங்கால் என்ன மாதிரியான ஆபத்து என நினைக்கலாம்.

இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே ஆபத்து வரலாம் என்பதுதான் வன ஆர்வலர்களின் கருத்து. அதாவது, இந்த கலப்பின விலங்கு தனது இனத்தை பெருக்கும். வனப் பகுதிகளில் இந்த கலப்பினங்கள் உருவாவது மிகவும் ஆபத்து என்கிறார்கள்.

ஏனெனில், ஓநாய் இனத்திற்கு பெரும் ஆபத்து என்பதோடு அவற்றின் தனித்துவம் மரபணு அடையாளம் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *