கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.7.2024

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஆந்திர மாநிலத்திற்கு அதிக நிதி உதவி வேண்டும், முதலமைச்சர் சந்திரபாபு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை.

* நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்கினை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.

*தங்களை கடவுளாக சித்தரித்து திரியும் சாமியார்கள் 112 பேருக்கு கும்பமேளாவுக்கு வர தடை விதிப்போம் என அகில பாரத அகாடா பரிசத் என்ற ஹிந்து அமைப்பு எச்சரிக்கை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மகாராட்டிராவில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிம்ப்ரி சிஞ்ச்வாத் பிரிவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் 28 நகரசபை உறுப்பினர்கள், சரத் பவார் அணியில் சேர்ந்தனர்.

* ரூ 2 லட்சம் வரை விவசாயிகளின் கடன் தள்ளுபடி, தெலங்கானா காங்கிரஸ் அரசு அறிவிப்பு.

* உ.பி. பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாற்றம்? துணை முதலமைச்சர் மவுரியா போர்க்கொடி? டில்லியில் ஆலோசனை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘பிரதமருக்கு வீண் பேச்சில் மட்டுமே அக்கறை’: குழந்தைகளுக்கு ‘தடுப்பூசி போடாத’ மோடி அரசு மீது மல்லிகார்ஜூனா கார்கே தாக்கு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை; காவல்துறை துப்பாக்கிச் சூடு ஒரு தொழிலதிபரின் உத்தரவின் பேரில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட செயல் என்று நாங்கள் நம்புகிறோம்” என வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.

தி இந்து:

* மகாராட்டிராவில் பாஜக தோல்விக்கு, அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி. அணியுடன் கூட்டு வைத்தது தான் காரணம் என ஆர்.எஸ்.எஸ். சார்பு வார இதழ் கருத்து.

தி டெலிகிராப்:

* புல்டோசர் பாபா என்று அழைக்கப்படும் உ.பி. முதலமைச்சர் யோகியை வெளியேற்ற பாஜக ஓபிசி தலைவர்கள் டில்லி பாஜக தலைமையிடம் புகார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்; வேலை வாய்ப்புகள், விலைவாசிகள், பாதுகாப்பு, ரயில்வே, நீட் மற்றும் தேர்வுத் தாள்கள் கசிவு ஆகிய பிரச்சினைகளை இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் விவாதிப்போம், ராகுல் உறுதி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *