பொள்ளாச்சி, ஜூலை 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிஅரசு நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி பாராட்டு விழா பொதுக்கூட்டம் கோவை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 13.07.2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி கழக மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து தலைமை தாங்கினார், காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம், கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கோவை மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், தாராபுரம் மாவட்ட செயலாளர் தம்பி பிரபாகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் திவ்ய பாரதி வரவேற்புரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சுவாமி வாக்காள பெருமக்களுக்கு நன்றி பாராட்டி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் என்.கே.பகவதி, சி.பி.அய்.எம் வட்ட செயலாளர் மகாலிங்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி, மனித நேய மக்கள் கட்சி பொறுப்பாளர் சுலைமான், திமுக வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் கா.இமயவரம்பன், ப.க. மாநில அமைப்பாளர் தரும வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் ஜெ.செழியன், மாவட்ட துணை செயலாளர் கி.சிவராஜ், மாவட்ட அமைப்பாளர் சு.ஆனந்தசாமி, நகரத் தலைவர் சு.வடிவேல், நகரச் செயலாளர் அர.நாகராஜ், திக செந்தில்நாதன், கோவை மாநகர தலைவர், கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் ம.பிரவின்குமார், நகர அமைப்பாளர் கா.வீரமலை, தெற்கு ஒன்றிய அமைப்பாளர் முருகானந்தம்,மாவட்ட இளைஞரணி தலைவர் கு.கார்த்தி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.வின்சென்ட்,வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் கோ சக்திவேல், மா தினேஷ் குமார், இலா மனோஜ் குமார், சபரிகிரி, ஆ.பேரறிவாளன், ஆ.அன் பழகன், வி.வர்ஷினி, மா.இலக்கியன், வீர.சகுந்தலா, அ.வீரமணி, நா.சு.பொற்கொடி, நா.சு. யாழ் மொழி, சி.கனகராஜ், ஆனைமலை ஒன்றிய தலைவர், ஆ.அறிவழகன், வி.வருண், சி.கனகராஜ் முத்து தினேஷ் கோவை தொழிலாளர் அணி வெங்கடாசலம், சுந்தராபு ரம் பகுதி தலைவர் கே குமரேசன் பகுதி துணைத் தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் மற் றும் தோழமை கட்சி பொறுப் பாளர்கள் பங்கேற்றனர். நிறைவாக பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் அ.இரவிசந்திரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.