மண்ணச்சநல்லூரில் பரப்புரை
மண்ணச்சநல்லூர், ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14-07-2024 காலை 11.00 மணி அளவில் லால்குடி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் மற்றும் பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் கலந்து கொண்டனர். தலைமைக் கழக அமைப்பாளர் ப. ஆல்பர்ட் தலைமை வகித்தார். லால்குடி மாவட்ட தலைவர் வால்டேர் முன்னிைல வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பி.என்.ஆர். அரங்கநாயகி, ராஜேந்திரன், முத்துசாமி, பாலச்சந்திரன், பாலசுப்ரமணியம், இசைவாணன், பிச்சைமணி, மணிவாசகம், திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம், ஆசைத்தம்பி, முரளிதரன், இந்து, பொற்செழியன், வீரமணி உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும், தோழமை இயக்க தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
துறையூர் பகுதியில் பரப்புரை
துறையூர், ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்
14-07-2024 அன்று 12 மணி அளவில் துறையூரில் பகுதியில் பிரச்சார பரப்புரைப் பயணம் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் கலந்து கொண்டனர். துறையூர் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப்பாளர் லால்குடி ப.ஆல்பர்ட், லால்குடி மாவட்ட தலைவர் வால்டேர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அன்பு ராஜா, செல்வி, பி.என்.ஆர்.அரங்கநாயகி, ராஜேந்திரன், முத்துசாமி, பாலச்சந்திரன், பாலசுப்ரமணியம், இசைவாணன்,பிச்சைமணி, மணிவாசகம், திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம், ஆசைத்தம்பி, முரளிதரன், இந்து, பொற்செழியன், வீரமணி உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்கத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
உரத்தநாட்டில் பரப்புரை
உரத்தநாடு, ஜூலை 17 நீட் எதிர்ப்பு வாகன பரப்புரைப் பயணக் குழுவினரை உரத்தநாட்டில் திமுக பொறுப்பாளர்கள் வரவேற்றனர். ஜூலை 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் 5 முனைகளில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு வாகன பரப்புரைப் பயணம் குழு குழுவின் இரண்டாம் குழு 14-07-2024 அன்று உரத்தநாட்டிற்கு வருகை வந்த குழுவினரை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் இராஜரத்தினம், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு, ஒன்றிய அவைத்தலைவர் சந்திரசேகரன் ஆகியோருடன் வருகை தந்து வாகன பரப்புரைப் பயணக் குழுவில் வருகை தந்த தோழர்களுக்குப் பயனாடை அணிவித்து வரவேற்று பயணக் குழுவின் நோக்கம் வெற்றி பெற திமுகவின் ஆதரவை தெரிவித்து மகிழ்ந்தார். உடன் திராவிடர் கழக மாநில மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் இருந்தனர்.
முசிறியில் பரப்புரை
முசிறி, ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 14-07-2024 அன்று பகல் ஒரு மணியளவில் முசிறியில் பகுதியில் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் தினேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். அன்பு ராஜா, செல்வி, பி.என்.ஆர். அரங்கநாயகி, ராஜேந்திரன், முத்துசாமி, பாலச்சந்திரன், பாலசுப்ரமணியம், இசைவாணன், பிச்சைமணி, மணிவாசகம், திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம், ஆசைத்தம்பி, இன்பராஜ், யுவராஜ், ரஞ்சித், ஆனந்த், ஆகாஷ், பிரதீப், முரளிதரன், இந்து, பொற்செழியன், வீரமணி உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்க தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் அருணகிரி நன்றி கூறினார்.
குளித்தலையில் பரப்புரை
குளித்தலை, ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14-07-2024 அன்று பகல் 2 மணி அளவில் குளித்தலையில் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் கலந்து கொண்டனர். இளைஞரணி சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் வே.ராஜு, மாவட்டத் தலைவர் மாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், திமுக நகர துணை செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் வடிவேல், சக்திவேல், சரவணன், பொன்னார், முரளிதரன், இந்து, பொற்செழியன், வீரமணி உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்கத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். மாணவர் கழகத் தோழர் விக்னேஷ் நன்றி கூறினார்.