கன்னியாகுமரியில் பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்

Viduthalai
1 Min Read

நாகர்கோவில், ஜூலை 17- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு மற்றும் மாநகர பகுதிகளில் நடந்த இந்தப் பரப்புரை நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், முன்னிலை வகித்தார்.

மாவட்ட காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், மாவட்ட கலை இலக்கிய அணிச்செயலாளர் பா.பொன்னுராசன், நாகர்கோவில் மாநகர கழகத் தலைவர் ச.ச.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.இராஜசேகர், கன்னியாகுமரி மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், வடசேரி பகுதி கிளைக்கழக தலைவர் பா.சு. முத்துவைரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தந்தை பெரியாருடைய கருத்துக்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *