கன்னியாகுமரியில் பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்

1 Min Read

நாகர்கோவில், ஜூலை 17- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு மற்றும் மாநகர பகுதிகளில் நடந்த இந்தப் பரப்புரை நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், முன்னிலை வகித்தார்.

மாவட்ட காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், மாவட்ட கலை இலக்கிய அணிச்செயலாளர் பா.பொன்னுராசன், நாகர்கோவில் மாநகர கழகத் தலைவர் ச.ச.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.இராஜசேகர், கன்னியாகுமரி மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், வடசேரி பகுதி கிளைக்கழக தலைவர் பா.சு. முத்துவைரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தந்தை பெரியாருடைய கருத்துக்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *