சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலி
திருச்சி, ஜூலை 17- புதுக் கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரி யம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் என அடையாளம் காணப்பட்டுள்ள னர். மேலும் படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி என்பவர் உயிரி ழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.