பள்ளியின் செயலர் வீ. அன்புராஜிடம் வைப்பு நிதி வழங்கல்

viduthalai
1 Min Read

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமையாசிரியை க. திலகவதி டாக்டர் சித்தார்த்தன் கணபதி அறக்கட்டளைக்கு ரூ.75,000 வைப்பு நிதியும், டாக்டர் தசரதன் திலகவதி அறக்கட்டளைக்கு ரூ.50,000 வைப்பு நிதியும் சேர்த்து மொத்தம் ரூ.1,25,000த்தை பள்ளியின் செயலர் வீ. அன்புராஜிடம் வழங்கினார் (16.7.2024). ஏற்கெனவே 2010ஆம் ஆண்டு டாக்டர் சித்தார்த்தன் கணபதி அறக்கட்டளைக்கு வழங்கியுள்ள ரூ.25,000 வைப்பு நிதியையும் மற்றும் 2019ஆம் ஆண்டு டாக்டர் தசரதன் திலகவதி அறக்கட்டளைக்கு வழங்கியுள்ள ரூ.50,000 வைப்பு நிதியையும் சேர்த்து மொத்த வைப்பு நிதியாக ரூ.2,00,000 அறக்கட்டளை வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவிக்கும் மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *