உத்தரப்பிரதேசம் மதுராவில் ரிசர்வ் காவல் பிரிவைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் பணி முடிந்த பிறகு நண்பர்களோடு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கோழி இறைச்சி வகை உணவை உண்டுள்ளனர்.
இதனை அவர்களது நண்பர்கள் வேறு வேறு ஊரிலிருக்கும் தமது குடும்பத்தாருக்கு படமெடுத்து அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் அந்த உணவு விடுதிக்கு வந்த ஹிந்துத்துவா அமைப்பினர் அவர்கள் இறைச்சி சாப்பிடுவதைப் படம் எடுத்து உ.பி. முதலமைச்சரான சாமியார் ஆதித்யநாத்திற்கு அனுப்பி உள்ளனர்.
‘‘உத்தரப்பிரதேசத்தில் சீருடையில் அதிகாரிகள் இறைச்சி சாப்பிடுகின்றனர், இது ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்றுஅவர்களுக்குத் தெரியாதா? ஹித்துக்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்?’’ என்று எழுதி அந்தப் படங்களை அனுப்பினர்.
இந்த நிலையில் மறுநாள் காலை உணவகத்தில் உணவருந்திய 10 காவல்துறை உயரதிகாரிகளும் பணி இடை நீக்கம் செயப்பட்டனர்.
‘‘பொது இடத்தில் கடமை தவறி மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டீர்கள். ஆகவே, உங்களை பணி இடை நீக்கம் செய்கிறோம்’’ என்று உத்தரப்பிரதேச தலைமைக்காவல் இயக்குநர் இந்த ஆணைையப் பிறப்பித்துள்ளார்.
இராணுவ வீரர்களுக்கு மாட்டுக் கறி கொடுக்கப்படுவதையும் தடை செய்வார்களா?
உ.பி.யில் புலால் உணவுக் கடைகள் கிடையாதா?
உ.பி.யில் என்ன ஹிந்துத்துவா ஆட்சி கொடி கட்டிப் பறக்கிறதா? தேர்தலில் அடி வாங்கியும் புத்தி மாறவில்லையே!
– மயிலாடன்