கோவை சுந்தராபுரத்தில் 75 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

1 Min Read

அரசியல்

அரசியல்

கோவை, ஆக. 19- 19.08.2023 அன்று கோயம்புத்தூர் சுந்தராபுரம், சரஸ்வதி மினி ஹாலில் 75 மாணவர்களுடன் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் கோவை மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன் வரவேற்றும், கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையேற்றும் உரையாற்றினர். 

கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி தொடக்க உரையாற்றினார். வி.சி.க. மாவட்டச் செயலாளர் அ.ஸ்டீபன் சுந்தர், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் நா.பிரபாகரன் பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். 

கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி – தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *