பெரியார் பாலிடெக்னிக் முதல்வருக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் பாராட்டு

viduthalai
1 Min Read

வல்லம், ஜூலை 17- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றிய முதல்வர் முனைவர் இரா.மல்லிகா அவர்களை “தேசிய அளவிலான சிறந்த பாலி டெக்னிக் முதல்வர் விருது” பெற்ற தற்காக கல்லூரி நிறுவனத் தலைவர் பாராட்டினார்.

இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் சிறப்பான செயல்பாடு களான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நடத்து வதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்து சிறப்பாக செயல்பட்ட வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி யாற்றிய கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.மல்லிகா, “இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் – ரங்கநாதன் பொறியியல் கல்லூரி – தேசிய அளவிலான சிறந்த பாலி டெக்னிக் முதல்வர் விருது – 2023″ (ISTE – Ranganathan Engineering College National Award for Best Polytechnic Principal for the year 2023) பெற்றார்.

இக்கல்லூரியின் நிறுவனத் தலை வர் ஆசிரியர் அவர்கள் விருது பெற்ற முனைவர் இரா.மல்லிகாவுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார். இவ்விருது பெற்ற முதல்வரை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *