தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2024) காலை திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், இனிகோ இருதயராஜ், எஸ். சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் டாக்டர் இரா. வைத்திநாதன், புனித அன்னாள் சபையின் தலைமை அன்னை சகோதரி கிளாரா வசந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.