சென்னை, ஜூலை 15- ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது, என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்ட குறிப்பில் கூறியிருப்பதாவது:
வளசரவாக்கம், வடபெரும்பாக் கம் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற் காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்ப, தகுதியான நபர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இடைநிலை ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும். முன்னுரிமை ஒரு காலிப் பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற் பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன்னுரிமை பரிசீலிக்கப்படும். இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் தேர் வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப் பவர்கள், அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் உள்ளிட்ட தகுதி யான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 19ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.