ஒசூர், ஜூலை 15- ஒசூர் 13ஆவது புத்தக திருவிழா 12.07.2024 அன்று ஓட்டல் ஹில்ஸ்-இல் தொடங்கியது. புத் தக திருவிழா தலைவர் பழ.பாலசுந்தரம் அனை வரையும் வரவேற்றார்.
ஒசூர் சட்டமன்ற உறுப் பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, மாநகர ஆணையா ளர் தி.சினேகா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சரயு புத்தக திருவிழாவை தலைமையேற்று திறந்து வைத்தார். புத்தக திரு விழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (கடை எண் 21) புத்தக கடையை மாநகர ஆணையாளர் தி.சினேகா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, மாநகர ஆணையாளர் தி.சினேகா ஆகியோர்க்கு “பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநகர துணை மேயர் சி.ஆனந்தையா,புத்தக திருவிழா ஒருங்கிணைப் பாளர் முனைவர் சேது ராமன், துணைத்தலைவர் ஆ.சிவக்குமார், செயலா ளர் இரா.பாலகிருஷ்ணன், திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் க.கா.சித்தாந்தன், தருண், சி.பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.