‘நீட்’ தேர்வு: ஒன்றிய அரசு- ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இளைஞரணி – மாணவரணி மருத்துவர் அணி சார்பில் இன்று பட்டினிப் போராட்டம்

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஆக. 20 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும்   போராட்டம் நடைபெற்றது . சென்னை வள்ளுவ ர் கோட்டம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற் றினார் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு மாண வர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசையும் ஆளுநரையும் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பட்டினிப் போராட்டம் (20.8.2023) நடை பெற்றது , புதுச்சேரி, காரைக்காலிலும்   பட்டினிப் போராட்டம் நடைபெற்றது

வள்ளுவர் கேட்டத்தில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன்,  பி.கே. சேகர்பாபு, உதயநிதி, மா. சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற் றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *