உலகப் புகைப்பட கலைஞர்கள் நாளன்று தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். அப்பொழுது முதலமைச்சரை புகைப்பட கலைஞர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்தனர். உடனே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படக் கலைஞராக மாறி புகைப்படக் கலைஞர்களை அவர் புகைப்படம் எடுத்தார். அவர் புகைப்படம் எடுத்தது வரலாற்று நிகழ்வாக மாறியது. (சென்னை 18.8.2023)