நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 13.07.2024 காலை 11.30 மணி அளவில் நிலக்கோட்டையில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் அவர்களும், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் அவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாசு அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட செயலாளர் கே.ஆர் காஞ்சிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மு.நாகராசன், தி.கா.செல்வம்,த.கருணாநிதி, இரா.சக்தி சரவணன், பாண்டி, சக்திவேல்,ச.பொன்ராஜ், கோ. சரவணன், பழ.நாகராஜ் உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
முதல் குழு கன்னியாகுமரி முதல் சேலம் வரை
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books