மறைவு

1 Min Read

திருவாரூர் மாவட்டம் – குடவாசல் ஒன்றியம், மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்ட மேனாள் விவசாய அணி செயலாளரும், குடவாசல் ஒன்றிய கழக தலைவரும், ஊராட்சி மன்ற மேனாள் தலைவருமான சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம் துணைவியாரும், சுயமரியாதைச் சுடரொளி அன்பழகன், குடவாசல் ஒன்றிய கழக துணைத் தலைவர் அம்பேத்கர் மற்றும் அன்புமணி ஆகியோரின் தாயாருமான பொன்னம்மாள் (வயது 87) வயது முதிர்வின் காரணமாக 10.7.2024 அன்று மதியம் 2 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

– – – – –

பெரியார் திடல் பணித் தோழர் வாணியின் தாயார் தேவகி கணேசன் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த அம்மையாருக்கு வீரவணக்கத்தையும், அவரது இணையர் கணேசன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். – பெரியார் திடல் பணித் தோழர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *