நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை தாராபுரம் நான்காம் குழுவிற்கு நம்பியூரில் சிறப்பான வரவேற்பு

Viduthalai
1 Min Read

நம்பியூர். ஜூலை14- நீட் எதிர்ப்பு வாகன பரப்புரைப் பயண குழுவை வரவேற்கும் விதத்தில் நம்பியூர் நகரம் முழுவதிலும் கழக கொடிகள் கட்டப்பட்டு 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் கழகத் தோழர்கள் படைசூழ கோபி கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன் தலைமை தாங்கினார்.

நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார், நம்பியூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜவஹர் பாபு, மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் என்.சி சண்முகம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சதீஷ்குமார், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பேரூராட்சி திமுக மேனார் தலைவர் கீதா முரளி, திமுக ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
கழக பேச்சாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜவகர் பாபு நூறு புத்தகங்களையும், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி 100 புத்தகம் கிடைக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் 100 புத்தகங்களையும், திமுக பேரூராட்சி மேனாள் தலைவர் சீதா முருகன் இரு புத்தகங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *