“நீட்” ஒழிப்பு பிரச்சார பெரும்பயண 5 குழுவினரின், பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை தெரிவித்து பொதுக்கூட்ட செய்தியையும் தெரிவித்தனர்

1 Min Read

9.9.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு, மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர்; கல்வித் துறை அமைச்சரும், ‘தமிழர் தலைவர்’ அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டவருமான மரியாதைக்குரிய செம்மலை அவர்களை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், கா.நா.பாலு, மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி.பூபதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி இராஜீ, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இ.தமிழர் தலைவர், தருமபுரி கார்க்கி நேசன் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சந்தித்து, “நீட்” ஒழிப்பு பிரச்சார பெரும்பயண 5 குழுவினரின், பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை தெரிவித்து பொதுக்கூட்ட செய்தியையும் தெரிவித்தனர்.
மேனாள் சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் பழைய முறையான 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே “மருத்துவக் கல்விக்கு” அனுமதி வழங்க வேண்டும் என்றும், “நீட்” அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *