உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணி நியமனங்களில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடுக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தி திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் கருத்தரங்கம் மதுரை தமிழ்நாடு தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது. மேனாள் நீதியரசர் அரி. பரந்தாமன், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ (எம்.பி.), தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரிமை மீட்பு உரையாற்றினார். தமிழர் தலைவருக்கு விழா குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழக்குரைஞர்கள் மு. சித்தார்த்தன், நா. கணேசன், த. வீரசேகரன், வீ.ரா. கதிரவன், இரா. பாஸ்கரன், வீரமர்த்தினி, கரூர் மு.க. ராஜசேகரன், ச. பாஸ்கர், அமர்சிங், பூவை. புலிகேசி, நிம்மதி ஆகியோர் வழங்கினர். (மதுரை, 18.8.2023)
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கருத்தரங்கம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books