மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

1 Min Read

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலத்திற்கு 14.7.2024 ஞாயிறு காலை 9 மணிக்கு பரப்புரைப் பயணம் வருகை தர உள்ளது தொடர்ந்து பூவனூர் ராயபுரம் காளாஞ்சி மேடு மன்னார்குடி காளவாய் கரை மேலவாசல் பேரையூர் ஓவேல் குடி வழியாக தஞ்சை மாவட்டம் ஒக்க நாடு கீழையூர் செல்ல இருப்பதால் இரு சக்கர வாகனம் வைத்துள்ள அனைத்து கழக தோழர்களும் நீடாமங்கலத்தில் வரவேற்று ஒக்க நாடு கீழையூர் வரை சென்று வழி அனுப்பும் நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

– ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் மாவட்ட தலைவர், கோ.கணேசன் மாவட்ட செயாளர்
மன்னை கழக மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *