‘நீட்’ எதிர்ப்பு பயண குழுவினருக்கு உதவி: பாராட்டு

1 Min Read

மதுரை, ஜூலை 13- மதுரைக்கு வருகை தந்த பயணக்குழுவினரை பழங்காநத்தம் பகுதியில் சிறப்பான வரவேற்பை அளித்து பரப்புரை முடித்து மதிய உணவிற்காக 3மணிக்கு தமிழக எண்ணெய்ப் பலகாரம் கடைக்கு வந்தனர்.

மதுரை போட்டோகிராபர் இராதா பயணத் தோழர்களுக்குப் பயன்படும் என யோசித்து 20 பேருக்கு மழை பாதுகாப்பு உடைகளை (ரெயின் கோட்) அன்பளிப்பாக வழங்கினார்.3-45க்கு பயணக் குழுவினர் புறப்பட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில்செல்லும்போது திரண்டு வந்த கருமேகங்கள் கடும் மழையைப் பொழிந்தன.

தூத்துக்குடியிலிருந்து கடும் வெயிலில் வந்த தோழர்களுக்கு மழை இதமானதாக இருந்தாலும் பயணம் சிறிது நேரம் தடைப் பட்டது. போட்டோ இராதா வழங்கிய மழையாடையை அணிந்து உசிலம்பட்டி வரை கடும்மழையிலும் பயணத்தைத் தொடர்ந்தனர். முன்கூட்டியே யோசித்துதக்க பயன்படும் பரிசை வழங்கிய இராதாவிற்கும் மதிய உணவிற்காக ஏற்பாடுகளைசெய்த ,நன்கொடையை வழங்கிய மாவட்ட காப்பாளர் தே.எடிசன்ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வப்பெரியார் ஆகியோருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பாராட்டுக்கள். வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *