கடவுள் சக்தி அவ்வளவுதானா?

Viduthalai
1 Min Read

‘அன்னதானம்’ கொடுக்கும் போது பக்தர் பலி

திருச்சி, ஆக. 20 திருச்சி மாவட்டம், சோம ரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு அம்மாசி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24). இவர் கடந்த 13-ஆம் தேதி கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை பகுதியில் உள்ள கரையூரான் நீலமேகம் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் கோவிலில் நடந்து கொண்டிருந்த ‘அன்னதான’த்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் வேலையில் பார்த்திபன் ஈடுபட்டிருந்தார். அங்கிருந்த ஒரு அண்டாவில் சாதத்தை எடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருகில் சூடாக இருந்த சாம்பார் அண்டாவில் தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 மருத்துவ அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி   பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பார்த்திபனின் தந்தை ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில், தோகை மலை காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பார்த்திபனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *