ஜி 20 மாநாட்டை ஒன்றிய அரசு தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது : ஜெய்ராம் ரமேஷ்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக.20 ஜி20 நாடு களின் உச்சி மாநாடு டில்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடக் கிறது. இந்த மாநாட்டை ஒன்றிய அரசு தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கூறுகையில், ‘ஜி20 அமைப்பு 1999ஆ-ம் ஆண்டு உருவானது. அதற்கு பிறகு 17 நாடு களில் இந்த அமைப்பின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவின் முறை. ஆனால் இந்த மாநாட்டை வைத்து இங்கு நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரமும், மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்கும் முயற்சி களும் வேறு எந்த நாட்டிலும் நடந்ததில்லை. உண்மையில், முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இது செய்யப் படுகிறது’ என சாடியுள்ளார்.

கடந்த 1983-ஆம் ஆண்டு இந்தியா 100 நாடுகளுக்கு மேல் உறுப்பின ராக கொண்ட அணிசேரா நாடுகளின் மாநாடு, அதைப்போல காமன்வெல்த் உச்சி மாநாடு போன்ற நிகழ்வுகளையும் நடத்தி யிருப்பதாக கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், ஆனால் அந்த நிகழ்வு களை தங்கள் தேர்தல் பலனுக்கான வாய்ப்பாக அப்போதைய அர சுகள் பயன்படுத்தவில்லை என் றும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *