ஜி 20 மாநாட்டை ஒன்றிய அரசு தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது : ஜெய்ராம் ரமேஷ்

1 Min Read

புதுடில்லி, ஆக.20 ஜி20 நாடு களின் உச்சி மாநாடு டில்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடக் கிறது. இந்த மாநாட்டை ஒன்றிய அரசு தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கூறுகையில், ‘ஜி20 அமைப்பு 1999ஆ-ம் ஆண்டு உருவானது. அதற்கு பிறகு 17 நாடு களில் இந்த அமைப்பின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவின் முறை. ஆனால் இந்த மாநாட்டை வைத்து இங்கு நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரமும், மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்கும் முயற்சி களும் வேறு எந்த நாட்டிலும் நடந்ததில்லை. உண்மையில், முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இது செய்யப் படுகிறது’ என சாடியுள்ளார்.

கடந்த 1983-ஆம் ஆண்டு இந்தியா 100 நாடுகளுக்கு மேல் உறுப்பின ராக கொண்ட அணிசேரா நாடுகளின் மாநாடு, அதைப்போல காமன்வெல்த் உச்சி மாநாடு போன்ற நிகழ்வுகளையும் நடத்தி யிருப்பதாக கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், ஆனால் அந்த நிகழ்வு களை தங்கள் தேர்தல் பலனுக்கான வாய்ப்பாக அப்போதைய அர சுகள் பயன்படுத்தவில்லை என் றும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *