‘நீட்’: மற்றொரு மாணவி தற்கொலை மனம் இரங்காதா ஒன்றிய பிஜேபி அரசுக்கு?

Viduthalai
1 Min Read

அரசியல்

தென்காசி, ஆக. 20 – தென்காசி மாவட்டம் செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சோமுத்துரை-கிருஷ் ணம்மாள். இந்த இணையருக்கு மொத் தம் 3 மகள்கள். மூத்த மகள் திவ்யா (வயது 17), பிளஸ்-2 முடித்துவிட்டு ‘நீட்’ தேர்வுக்காக சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மய்யத்தில் படித்து வந்தார்.

இவருக்கு ராகிணி, சவதிகா என்று 2 தங்கைகள் உள்ளனர். 12 வயது நிரம் பிய அவர்கள் இரட்டை குழந்தைகள் ஆவர்.

கடந்த 15ஆம் தேதி திவ்யா வழக்கம் போல் ‘நீட்’ பயிற்சி மய்யத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அவர் திடீ ரென வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

வயலுக்கு வேலைக்கு சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்த போது, திவ்யா விஷம் குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே அவரை மீட்டு சிகிச் சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை அய்கிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி 17.8.2023 அன்று இரவு திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குருவிகுளம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து மாணவி யின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *