டில்லி பல்கலைக் கழகத்தில் மனுஸ்மிருதி கற்பிப்பதற்கான திட்டமா?

1 Min Read

உடனடியாக இத்திட்டத்தைக் கைவிடுக!

‘‘டில்லி பல்கலைக் கழகத்தின் எல்.எல்.பி. மாணவர்களுக்கு மனுஸ்மிருதி (மனுவின் சட்டங்கள்) கற்பிப்பதற்கான திட்டம் இன்று (12.7.2024) வெள்ளிக்கிழமை அதன் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
‘‘ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் கண்டனம்” – என்ற செய்தி ‘நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் (12.7.2024) வெளிவந்துள்ளது.
இது முழுக்க முழுக்க, சமூகநீதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பாதகம், கேடு செய்யத் தூண்டும் ஒரு செயல்; இதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ். முயற்சி போல் தோன்றுவதோடு, கல்வியை காவியமயமாக்கும் இத்திட்டம் அரசமைப்புச் சட்ட விரோதமாகும்.

ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் ஜாதி வன்முறைகளை நியாயப்படுத்தும் மனுஸ்மிருதி பல்கலைக் கழக பாடத் திட்டமாக டில்லி பல்கலைக் கழகத்திலோ, வேறு எங்காவது திணிக்கப்பட்டாலோ இமயம் போன்ற எதிர்ப்பு அலைகடலாக எழுவது உறுதி!
மீண்டும் மனுதர்ம எரிப்புப் போராட்டங்களை இது தூண்டிவிடும் நிலையைத்தான் உருவாக்கும். எனவே, இது அறவே கைவிடப்படவேண்டும். இது ஒரு ஆழம் பார்க்கும் வேலை.
உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும். வன்மையாக இம்முயற்சியைக் கண்டிக்கின்றோம்.

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை,
12.7.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *